அனுபவக் கதை
"இனிமே எவனையாவது நம்புவேன்?"
ரவா இட்டிலியை ஆர்வத்துடன் பிய்த்துத் தின்றபடி பன்சிலால் முணுமுணுத்தான்.
கன்னையா எதுவும் சொல்லவில்லை.
"அது எப்படி இந்த துரோகி நாய்களுக்கெல்லாம் சொல்லி வைத்ததுபோல வதனம் சந்திர பிம்பமாகவும் மலர்ந்த சரோஜமாகவும் இருக்கிறது?"
"அது மட்டும் எனக்குத் தெரியாது. ஆனால் அப்படிப்பட்டவர்கள் நடக்கும்போதெல்லாம் அவர்களுடைய தடித்த தொடைகள் அதிகமாய் உரசிக் கொள்வதை நான் கவனித்திருக்கிறேன்."
ரவா இட்டிலியை ஆசையுடன் பார்த்தபடியே கன்னையா சொன்னான்.
- சற்று முன் என் கைக்குக் கிடைத்த இன்னும் பெயரிடப்படாத போஜ்புரி நாவலில் இருந்து.
Comments
Post a Comment
வணக்கம். உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். இங்கும் பதியலாம். sithurajponraj134@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.